ஈரோடு மனவளக்கலை மன்றத்தில் யோகா பயிற்சி வகுப்புகள்

 

ஈரோடு, நவ.4: ஈரோடு, பெரியார் நகரில் இயங்கி வரும் மனவளக்கலை மன்றம் அறிவுத்திருக்கோயிலில் புதிய யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கவுள்ளன. நாளை மறுதினம் 6ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி நவம்பர் 20ம் தேதி வரை காலை 7 மணி முதல் 8.30 மணி வரை ஒரு வகுப்பும், இதே தேதியில் பெண்களுக்கு காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஒரு வகுப்பும், மேலும் நவம்பர் 13ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை மற்றொரு வகுப்பும் துவங்கவுள்ளன.

இவ்வகுப்புகளில் எளியமுறை தியானப்பயிற்சிகள், உடற்பயிற்சிகள், யோகா, காயகல்பப் பயிற்சிகள் மற்றும் சூரியநமஸ்காரம் ஆகிய அடிப்படை பயிற்சிகள் கற்றுத்தரப்படவுள்ளன. 14 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சிகளை கற்றுக் கொள்வதன் மூலம் உடல் நலம் பெறவும், நோய்கள் நீங்கவும், மன அழுத்தம் குறையவும் அமைதி பெறவும், மேலும் உயிர் வளம் பெறவும், இளமை நீடிக்கவும் செய்கிறது.

மேலும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு வகுப்புகளும் துவங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதிலும் சேர்ந்து பயன்பெறலாம் என நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். சேர்க்கை விவரங்களுக்கு 99449-30539,94433-61227 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related posts

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

விமான நிலைய சுற்றுப்பகுதிகளில் லேசர் விளக்கு, வெப்ப காற்று பலூன் பறக்க விட தடை: சென்னை காவல்துறை உத்தரவு

ஒரு வருடமாக பணிகளை செய்யாமல் மோதல் மதுரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துணை தலைவரின் செக் பவர் நிறுத்தம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி