ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வன்முறையை தூண்ட அதிமுக திட்டம்: தேர்தல் ஆணையத்திடம் புகார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வன்முறையை தூண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கியுள்ள இடங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அன்பளிப்புகளை குவித்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் 40 ஆயிரம் பேர் போலி வாக்காளர்கள் என சி.வி.சண்முகம் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். இப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் கலவரம், வன்முறையை தூண்டிவிட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செயல்பட தொடங்கியிருக்கிறார்கள். எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்