ஈரோட்டில் கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நாளை முதல் சுதர்சன யாகம்

 

ஈரோடு, ஜூன் 25: ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கமலவல்லி தாயார் சமேத கஸ்தூரி அரங்கநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுதர்சன யாகம் நாளை (26ம் தேதி) முதல் விக்னேஸ்வர பூஜை துவங்குகிறது. தொடர்ந்து காயத்ரி மந்திரம், மாலாமந்திர ஜபமும், மாலை 5 மணிக்கு வேத பாராயணமும் நடக்கிறது, 27ம் தேதி காலை 6 மணிக்கு சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, 8.30 மணிக்கு சுதர்சன யாகம், மாலை 5 மணிக்கு சதுர்வேத பாராயணமும் நடக்கிறது.

வரும் 28ம் தேதி காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், திருப்பல்லாண்டு, வேத பாராயணம், காலை 7 மணிக்கு சுதர்சன யாகம் பூர்த்தி, காலை 10 மணிக்கு கலச புறப்பாடு, காலை 11 மணிக்கு சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு தேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஹோமம் நடக்கும் நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது என கோயில் செயல் அலுவலர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்