இளையான்குடி, டிச.23: இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இளையான்குடி மற்றும் புதூர் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை எம்எல்ஏ தமிழரசி தொடங்கி வைத்தார். ஆர்டிஓ சுகிதா, முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜுமுதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கீழாயூர், புதூர், மல்லிபட்டிணம், சோதுகுடி, பகைவரைவென்றான் ஆகிய பதினெட்டு பேரூராட்சி வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிமைப் பொருள், மின்சாரம், சுகாதாரம், குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து, பட்டாமாறுதல், வீட்டுமனை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் முகாமில் கொடுத்தனர். முகாமில் தாசில்தார் கோபிநாத், பேரூராட்சி செயலர் கோபிநாத், ஆணையாளர் முத்துக்குமரன், மின்வாரிய பொறியாளர் கண்ணதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.