போடி, செப். 17: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரது தந்தையில் கேரள மாநிலத்தில் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் அந்த இளம்பெண் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று பாட்டி வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது இளம்பெண் வீட்டில் இல்லை. உறவினர்கள் அக்கம்பக்கத்தில் விசாரித்தும், பல இடங்களில் தேடிப்பார்த்தும் எங்கு சென்றார் என கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரில் போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.