இளம்பெண் தற்கொலை

கோவை,ஜூலை2: பீளமேடு பாலவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெனிபா (24). இவருக்கும், வெள்ளலூரை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபா தனது கணவரை பிரிந்து பீளமேடு பகுதியில் தனியாக வசித்து வந்தார். அவரது கணவர் பிரவீன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெனிபா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை