இளம்பெண் கூட்டு பலாத்காரம்; திருவள்ளூர் அருகே கொடூரம்.! ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது

திருவள்ளூர்: ஆட்டோவில் இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த சீத்தஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இவருக்கும் காக்களூர் பைபாஸ் சாலையில் வசிக்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன்காரணமாக அவர்கள் அடிக்கடி பேசிக்கொள்வார்கள் என்று தெரிகிறது. மேலும் வாடகைக்கு அவரது ஆட்டோவில் அடிக்கடி சென்றுவந்துள்ளதாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் அந்த இளம்பெண்ணை சீத்தஞ்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே விஜய்யின் நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோர் இருந்துள்ளனர். வீட்டில் அந்த இளம்பெண் அமர்ந்து இருந்தபோது திடீரென விஜய் உள்பட மூவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் அந்த இளம்பெண் தவித்துள்ளார். இதனிடையே இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால் விஜய் உள்பட அனைவரும் தப்பிவிட்டனர்.இதன்பிறகு பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த விஜய், சாம்ராஜ், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆட்டோவில் கடத்திச்சென்று இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை