இளம்பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்

ஊத்தங்கரை, ஜூலை 5: ஊத்தங்கரை முல்லை நகரைச் சேர்ந்த 24வயது இளம்பெண், பிகாம்., சிஏ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 1ம் தேதி மாலை, கடைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதில், செங்கம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த புஷ்பராஜ் (28) என்பவர், எங்களது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை