இலையூர் வாரியங்காவல் அரசு பள்ளியில் மரக்கன்று நடுவிழா

 

ஜெயங்கொண்டம், ஜூன் 21: ஜெயங்கொண்டம் அருகே இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் வாரியஙகாவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. பள்ளி வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் நட்டு வைத்து ஒவ்வொரு மாணவர்களும் செல்லும் இடங்கள் மற்றும் தங்களது வீட்டில் தோட்டங்களில் மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டுமென மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். பசுமை படைத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலு, விவசாய ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி