உடுமலை, மே 6: திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக்கல்லூரி உடுமலை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான இலவச தடகள பயிற்சி முகாம் மே 1 முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்வில் உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வர் கல்யாணி மற்றும் திருப்பூர் தடகள சங்க தலைவர் ஆர்பிஆர் சண்முகசுந்தரம் மற்றும் செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக சத்யம் பாபு, உடுமலை கிரிக்கெட் பயிற்சியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாணவ, மாணவிகளுக்கு தினமும் இரு வேலையாக பால் மற்றும் சிற்றுண்டி தடகள ஆர்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.