இலவச கண் சிகிச்சை முகாம்

சத்தியமங்கலம், ஜூலை 7: பவானிசாகர் யங்மைன்ட்ஸ் சங்கம் மற்றும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் பவானிசாகர் நகர் பகுதியில் உள்ள குருனாப்பூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. முகாமினை சங்க தலைவர் சங்கர் தொடங்கி வைத்தார். அரசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பொதுமக்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக ஈரோடு அழைத்து செல்லப்பட்டனர். இந்த முகாமில் ஆலோசகர் மூர்த்தி, செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது