இலவச கண் சிகிச்சை முகாம்

 

பந்தலூர், ஜூலை 10: பந்தலூர் அருகே பாரி அக்ரோ நிறுவனம் மற்றும் அரவிந் கண் மருத்துவமனை சார்பில் மேங்கொரேஞ்ச் தேயிலை தோட்டம் வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரவிந் கண் மருத்துவமனை மருத்துவர் ரப்பீக், பைச முஸ்தபா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். கண்புரை உண்டாகுதல், மாறு கண் நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், சீல் வடிதல், தூரப்பார்வை ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கண் அறுவை சிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை கோவை மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்வது மருந்து தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுவதாகவும், தரமான கண் கண்ணாடியும் குறைந்த விலையில் வழங்குவதாகவும் தெரிவித்தனர். முகாமை மேங்கொரேஞ்ச் தேயிலைத்தோட்டம் பொதுமேலாளர் ஆப்ரகாம் மேத்யூ, முதுநிலை மேலாளர் ஹரிநாயர் மேங்கொரேஞ்ச் மருத்துவமனை மருத்துவர் கார்த்திக்ராஜா, மருந்தாளுனர் ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் ஹரிஹரன் செய்திருந்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை