இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா வரும் மே 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கஜபா படைப்பிரிவை சேர்ந்த மேஜர் ஜெனரல் விகம் லியகனே இலங்கை ராணுவத்தின் தொனர் படையின் கட்டளை தளபதியாக பணியாற்றினார்.ராணுவத்தின் 58-வது தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் அவர் படைகளின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்றார். இந்நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி விகம் லியகனே இலங்கையின் ராணுவ தளபதியாக பதவி ஏற்கவுள்ளார்.கோட்டாபாய ராஜபக்சவின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவரான சவேந்திர சில்வாவின் இந்த முடிவு இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி