Saturday, September 28, 2024
Home » இலங்கை கடற்படை அட்டூழியம் வலைகளை வெட்டி கடலில் வீசி தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

இலங்கை கடற்படை அட்டூழியம் வலைகளை வெட்டி கடலில் வீசி தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

by kannappan

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் பலத்த காற்று மற்றும் புயல் எச்சரிக்கையால், கடந்த 12 நாட்களாக மீன்பிடிக்க செல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் கடற்படை கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி படகுகளை வழிமறித்து தடுத்து விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் வேறு பகுதிக்கு படகுகளை திருப்பி சென்றனர். மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் ஒரு சில படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் வெட்டி கடலில் வீசினர். இலங்கை கடற்படையினரின் இந்த அடாவடி நடவடிக்கைகளால், நேற்று காலை கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளில் மீன்வரத்து மிகவும் சுமாராகவே இருந்தது….

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi