தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி கியூ பிரிவு போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு தாளமுத்துநகர் சுனாமி காலனி அருகே சோதனை நடத்தினர். அப்போது நிற்காமல் சென்ற மினி லாரியை விரட்டிச் சென்று மடக்கினர். சோதனையில் லாரியில் 13 மூட்டைகளில் 450 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மினி லாரியுடன் அவற்றை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், லாரி டிரைவர் ஆண்டிசெல்வம் (27) என்பவரை கைது செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி. …