இறந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

அரூர்: ஓசூர் அருகே பட்டாசு கடை வெடி விபத்தில் பலியான 7 பேரின் உடல்கள் ஆம்புலன்ஸ்களில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனால், கிராமமே சோகத்தில் மூழ்கியது. கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் நேற்று முன்தினம் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. இதில், இறந்தவர்களின் உடல்கள் தனித்தனி ஆம்புலன்ஸ்களில் சொந்த ஊரான டி.அம்மாபேட்டைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வரிசையாக தகனம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியளவில் உடல்கள் வந்தடைந்தது. இறுதி சடங்கிற்கு பின்னர் 7 மணியளவில் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை