ஆவடி: இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில், தூக்கில் தொங்கிய முதியவர் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர். ஆவடியை அடுத்த பொத்தூர் உப்பரபாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). இவர் சென்னை பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இவரின் மனைவி செல்வி (47). இவர்களது மகன் லட்சுமிபதி (22), இவர் பூந்தமல்லி பகுதியில் உள்ள கல்லூரியில் பிஇ படித்து வருகின்றார்.கடந்த ஓராண்டாக ரவிச்சந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதற்காக சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில், நேற்று செல்வி, தனது சொந்த ஊரான நெய்வேலிக்கு சென்றுள்ளார். இதன்பிறகு அவரது மகன் கல்லூரிக்கு சென்றுவிட்டார். வீட்டில் ரவிச்சந்திரன் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், ரவிச்சந்திரனின் தம்பி சங்கர் மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ரவிச்சந்திரன், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது இரண்டு கைகளும் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றிய புகாரின்படி, இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் வழக்குப்பதிவு செய்து, ரவிச்சந்திரனின் மர்மச்சாவு குறித்து விசாரிக்கின்றார்.கொரட்டூரில் வாலிபர் சடலம்கொரட்டூர் பிராமின் தெருவை சேர்ந்தவர் குமார் (எ)வெங்கடேசன் (37). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றினார். தனக்கு உறவினர் கிடையாது. அனாதையான எனக்கு திருமணமாகவில்லை என்று கூறி மேற்கண்ட முகவரில் வாடகை வீட்டில் வசித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 27ம் தேதிக்கு பிறகு வெங்கடேசனை அப்பகுதியினர் பார்க்கவில்லை. நேற்றிரவு அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் பக்கத்து வீட்டினர் சென்று பார்த்துள்ளனர். அங்கு வெங்கடேசனின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவலின்படி, கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். இதுபற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்….
இரு கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய முதியவர் உடல்: ஆவடி அருகே பரபரப்பு
previous post