இரண்டாம் கட்ட நீச்சல் பழகுதல் பயிற்சி முகாம்

தர்மபுரி, ஏப்.13: தர்மபுரியில், 2ம் கட்ட நீச்சல் பழகுதல் பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தர்மபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் பழகுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2ம் கட்ட நீச்சல் பழகுதல் பயிற்சி முகாம் நாளை(14ம் தேதி) முதல் 25ம் தேதி வரை தர்மபுரி செந்தில்நகர் ராஜாஜி நீச்சல் குளத்தில் நடக்கிறது. பெண்களுக்கு தனியாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினசரி காலை 7 மணி முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும் பயிற்சி நடக்கிறது. ஆண்களுக்கு காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாணவிகள் மற்றும் பெண்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். நீச்சல் பயிற்சி கட்டணம் ₹1770 ஆகும். இதற்கான விண்ணப்பத்தை நீச்சல்குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை