இரணியல் அருகே வடமாநில வாலிபர் மர்மச்சாவு போலீசார் தீவிர விசாரணை

திங்கள்சந்தை, செப்.17 : இரணியல் அருகே உள்ள மேல்பாறையில் கடந்த 4ம்தேதி பகல் 11.15 மணியளவில் சுமார் 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவல் மருத்துவமனையில் இருந்து இரணியல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அவர் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து இரணியல் போலீசார் அந்த நபர் போதையில் கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும் அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனையில்தான் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை