Monday, July 1, 2024
Home » இரணியல் அருகே இன்ஸ்ட்டாகிராமில் பழகியமாணவியை கர்ப்பமாக்கியவாலிபர் மீது போக்சோ வழக்கு

இரணியல் அருகே இன்ஸ்ட்டாகிராமில் பழகிய
மாணவியை கர்ப்பமாக்கிய
வாலிபர் மீது போக்சோ வழக்கு

by Karthik Yash

குளச்சல், ஏப். 4 : இரணியல் அருகே கண்டன்விளை தெக்கன்தெருவிளையை சேர்ந்தவர் வைகுண்டமணி(27). டி.எம்.இ. படித்துள்ளார். இவருக்கு இன்ஸ்ட்டாகிராமில் தக்கலையை அடுத்த ஒரு ஊரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இம்மாணவியை வைகுண்டமணி சடவிளைபுதுவிளையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்தாராம். இதனால் கர்ப்பமான மாணவியை வைகுண்டமணி கேரள மாநிலம் மலப்புறம் பகுதியில் கட்டிட வேலை செய்யும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு தனிக்குடித்தனம் நடத்தி வந்த வைகுண்டமணி மாணவிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வைகுண்டமணி மாணவியை அடித்தராம்.இது குறித்து மலப்புறம் கடையொன்றில் வேலை பார்க்கும் மாணவியின் தந்தையிடம் மாணவி கூறினார். மாணவியின் தந்தை பந்தளம் போலீசில் புகார் செய்தார். இதனால் மாணவியை போலீசார் ஹோமிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவி குமரி மாவட்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். ஊருக்கு வந்த மாணவி இந்த சம்பவங்கள் குறித்து தமிழ்நாடு டி.ஜி.பி.யிடம் புகார் மனு செய்தார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட எஸ்.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டது. குமரி மாவட்ட எஸ்.பி. குளச்சல் மகளிர் போலீசாருக்கு விடுத்த உத்தரவின்பேரில் குளச்சல் மகளிர் போலீசார் வைகுண்டமணி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவியை அடித்ததாக வைகுண்டமணி மீது பந்தளம் போலீசார் பதிவு செய்த வழக்கும் குளச்சல் மகளிர் போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு, அந்த வழக்கும் குளச்சல் மகளிர் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவிக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

You may also like

Leave a Comment

four + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi