இரட்டை ரயில்பாதை பணிகள்: மதுரை- விருதுநகர் இடையே அக்.17, 18ல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

நாகர்கோவில்: தெற்கு  ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: மதுரை – விருதுநகர்  பிரிவில் தண்டவாளத்தை இரட்டிப்பாக்கும் பணிகளுக்காக ரயில் போக்குவரத்து  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ரயில் எண்: 20691 தாம்பரம் –  நாகர்கோவில் சந்திப்பு அந்தியோதயா அதிவிரைவு ரயில்  அக்டோபர் 17ம் தேதி  அன்று திண்டுக்கல் சந்திப்பில் நிறுத்தப்படும். இந்த ரயில் திண்டுக்கல் –  நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.ரயில் எண்: 20692 நாகர்கோவில்  சந்திப்பு – தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு ரயில் அக்டோபர் 18ம் தேதி  நாகர்கோவில் சந்திப்புக்கு பதில் திண்டுக்கல் சந்திப்பில் இருந்து  சேவையைத் தொடங்கும். இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு-திண்டுக்கல் இடையே  ரத்து செய்யப்படுகிறது.ரயில் எண்: 16321 நாகர்கோவில் சந்திப்பு –  கோயம்புத்தூர் சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் அக்டோபர் 18ம் தேதி நாகர்கோவில்  சந்திப்புக்கு பதில் திண்டுக்கல்லில் இருந்து சேவையைத் தொடங்கும்.  நாகர்கோவில் – திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.ரயில் எண்:  16322 கோயம்புத்தூர் சந்திப்பு – நாகர்கோவில் சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ்  அக்டோபர் 18ம் தேதி திண்டுக்கலில் நிறுத்தப்படும். இந்த ரயில் திண்டுக்கல்  – நாகர்கோவில் சந்திப்பு இடையே ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண்:  16128 குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 17 அன்று  குருவாயூரில் இருந்து புறப்பட்டு மானாமதுரை வழி செல்லும். ரயில் எண்:  16340 நாகர்கோவில் சந்திப்பு – மும்பை சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில்  இருந்து அக்டோபர் 18ம் தேதி அன்று புறப்பட்டு மானாமதுரை வழியாக செல்லும்.ரயில்  எண்: 22627 திருச்சி சந்திப்பு – திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி  எக்ஸ்பிரஸ் திருச்சியிலிருந்து அக்டோபர் 18 புறப்படுவது மானாமதுரை வழி  இயக்கப்படும்.ரயில் எண்: 16342 திருவனந்தபுரம் சென்ட்ரல் –  குருவாயூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தில் இருந்து 18ம் தேதி  மாலை 5.30 மணிக்கு புறப்படுவது ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு  புறப்படும்.  …

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்