இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

போடி :  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு, போடியில் நடந்த இரட்டைமாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம், போடியில் வடக்கு மாவட்ட திமுக, போடி ஒன்றிய திமுக, இரட்டை மாட்டு வண்டி சங்கம் சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பந்தயத்துக்கு போடி திமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான லெட்சுமணன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட பிரதிநிதி விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் பழனிகுமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளரும், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான மூக்கையா கொடியசைத்து பந்தயத்தை துவக்கி வைத்தார். பந்தயத்தில் மொத்தம் 159 இரட்டைமாட்டு வண்டிகள் பங்கேற்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு, வெற்றி கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போடி நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….

Related posts

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு

சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டலக்குழு தலைவர் வெட்டிக்கொலை: தொழில் போட்டியா அல்லது முன்பகை காரணமாக என போலீஸ் விசாரணை