இயந்திரமுறை பூச்சி மேலாண்மை

மானியம்இயந்திர கருவிகளின் உதவியுடன் பூச்சிகளை சேகரித்து அழிப்பது இயந்திரமுறைப்பூச்சி மேலாண்மை. கருவிகளை பயன்படுத்தி  விளை நிலத்தில் உள்ள பூச்சிகளின் தாக்குதலை குறைத்திடலாம். விளக்குப்பொறி பெரும்பாலான விட்டில் பூச்சிகள் வண்டுகள் வெளிச்சத்தால் கவரப்படுபவை. எனவே, இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை வயல்களில் விளக்குப்பொறிகளை வைப்பதன் மூலம் அந்துப்பூச்சி வண்டுகளால் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. இவற்றால் பூச்சிகளின் இனப்பெருக்கம் பெரும் வகையில் தடுக்கப்படுகின்றது. பல்வேறு வகையான விளக்குப்பொறிகள் பூச்சிக்கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டாலும் மண்ணெண்ணெய், மின்சார, சோலார் விளக்குப்பொறி மற்றும் புற ஊதாக்கதிர் விளக்குப்பொறி போன்றவை பூச்சிக்கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகின்றன. அந்துப்பூச்சிகள் பயிரில் தென்பட்டவுடனேயோ அல்லது முட்டையிடும் முன்போ விளக்குப் பொறிகளை பயன்படுத்துவது அவசியம். விளக்குப்பொறி கொண்டு வயல்களில் ஒரு குறிப்பிட்ட வகைப்பூச்சியின் செயல்பாட்டினைக் கண்காணித்திடலாம். இரவு 11 மணிக்கு மேல் விளக்குப்பொறிகளைப் பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அவை நன்மை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும்.  சிறிய உடலமைப்பினைக் கொண்ட பூச்சிகள் பலவித வண்ணங்களால் கவரப்படும் குணமுடையவை. வண்ண அட்டைகளில் ஒட்டும்  எண்ணெய் தடவப்பட்டுப் பூச்சிக் கட்டுப்பாட்டிற்காகவும், பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. பூச்சிகளை கண்காணிக்க ஏக்கருக்கு 5 என்ற அளவிலும் ஒட்டும் பொறிகள் வைக்கலாம். பொறிகளின் அடிப்பாகம் பயிர்களின் நுனியில் பொருந்துமாறு வயல் களில் பொருத்த வேண்டும். பூச்சிகளுக்கு தகுந்த வண்ண ஒட்டும் பொறிகள் உள்ளன.  பொறிகளை 10 நாட்களுக்கு ஒரு முறை கண்காணித்து தேவைப்படின் ஒட்டும் திரவத்தினை மீண்டும் மீண்டும் தடவி விட வேண்டும். சிறிய பிளாஸ்டிக் குடம், பெயின்ட் காலி டப்பா, பிளாஸ்டிக் விரிப்புகள் மற்றும் தார்ப்பாலின்களைத் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பொறி மூலம் வெள்ளை ஈ, அசுவினி, இலைப்பேன், திராட்சை உண்ணி வண்டு, பழ ஈ, முட்டைகோசு ஈ, சுருள் பூச்சிகள். நீலம் பொறி மூலம் இலைப்பேன், முட்டைக்கோஸ் ஈ, பருத்திக்காய் கூன்வண்டுகள், ஊதா பொறி மூலம் இலைப்பேன், பூப்பேன், பச்சை பொறி மூலம் பழ ஈ, பருத்திக்காய் கூன் வண்டு, வெள்ளை இலைப்பேன், பருத்திக்காய் கூன் வண்டு, ஆரஞ்சு பொறி மூலம்  தத்துப் பூச்சிகள் கவரப்படும். இனக்கவர்ச்சிப் பொறிகள்பூச்சிகள் ஒன்றோடொன்று தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளவும், எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், இனப்பெருக்கத்திற்காகவும், ஒரு விதமான வாசனைத் திரவத்தினை சுரந்து காற்றில் பரப்பி விடுகின்றன. இந்த திரவம் இனக்கவர்ச்சி திரவம் என்று அழைக்கப்படுகின்றது. பூச்சிகளால் சுரக்கப்படும் இனக்கவர்ச்சி திரவத்தின் தன்மை மற்றும் அவற்றின் பண்புகள் கண்டறியப்பட்டு, அவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பூச்சிகளைக் கவர்ந்து அழித்திட பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆண், பெண் பூச்சிகளைத்தனித்தனியாகவோ கூட்டாகவோ கவர்ந்து அழித்திடலாம். இனக்கவர்ச்சிப்பொறிகளைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பயிரில் பூச்சிகளின் தாக்குதல் இருக்கிறதா, இல்லையா என கண்டறிந்திடலாம். பூச்சிகளைக் குழப்பமடையச் செய்து இனச்சேர்க்கை நடைபெறாமல் தடுத்திடலாம். இனக்கவர்ச்சிப் பொறிகள் பல்வேறு உருவங்களிலும், வண்ணங்களிலும் சந்தை களில் கிடைக்கின்றன. அவற்றுள் ‘ஜாக்சன், ‘மெக்பாலி’ வகைப்பொறிகள் பழ ஈ-களுக்காகவும், ராம்ஸ் வகை வண்டுகள் மற்றும் கூன் வண்டு களுக்காகவும், புணல்வகைப்பொறி தண்டு துளைப்பான், காய்த்துளைப்பான் மற்றும் கொட்டைத்துளைப்பான்களுக்காகவும், இறக்கை மற்றும் பொறிகள் அந்துப்பூச்சிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இனக்கவர்ச்சிப்பொறிகளை பயிர்களின் இலைப்பரப்பிற்கு மேல் இருக்கும் படி பொருத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். தீனிப்பொறிபூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் கவர்ச்சி பொருள் கவர்ச்சிப்பொறியினுள் வைக்கப்பட்டு பூச்சிகள் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. உதாரணமாக,சோளத்தில் குருத்து ஈக்களை கட்டுப்படுத்த கருவாட்டுப்பொறி பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் கருவாட்டுத்துகள்கள் பாலித்தீன் பையிலோ(அல்லது) பிளாஸ்டிக் டப்பாவிலோ வைக்கப்படுகிறது. இவற்றால் கவரப்படும் பூச்சிகளைக்கொல்ல டைக்குளோர்வாஸ் பஞ்சு பயன்படுத்தப்படுகிறது. இதைப்போலவே தோட்டக்கலை பயிர்களைத்தாக்கும் பழ ஈக்களைக் கவர்ந்திழுத்திட மீத்தைல் யூஜினால் பயன்படுத்தப்படுகிறது. போலவே பறவை தாங்கிகள் உட்காரும் இடங்களை செயற்கையாக நிறுவுவதன் மூலம் பறவைகள் உட்கார்ந்து புழுக்களை உண்ணும் சூழ்நிலையை உருவாக்கிடலாம். இவற்றின் மூலம் புழுக்களையும், வயல் எலிகளையும் எளிதில் கட்டுப்படுத்திடலாம்.அட்டைப்படம்: எஸ்.வெங்கடேஷ்தொகுப்பு: எம்.சதீஷ்

Related posts

நாட்டுக்கோழி வளர்ப்பில் பட்டையக் கிளப்பும் பட்டதாரி!

நெகிழ்ச்சியான நெல் சாகுபடி!

உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 11