இன்றைய மின்தடை ஒத்திவைப்பு

 

போடி, மே 20: போடி அருகே அணைக்கரைபட்டி துணை மின்நிலையத்தில் இன்று (மே 20) மாதாந்திர பராமரிப்பு பணிக்காக போடி அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், குரங்கணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்வது என முடிவு செய்யப்பட்டது. தற்போது, அக்னி நட்சத்திரத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நலன்கருதி மின்தடை செய்வதை ஒத்தி வைத்துள்ளனர். மேலும், மாதாந்திர பராமரிப்பு பணி ஜூன் மாதம் நடைபெறும் என செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து