இன்று ரேஷன் குறைதீர் கூட்டம்

 

சிவகங்கை, ஜூலை 8: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் நுகர்வோர் சிறப்பு முகாம் இன்று நடக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேஷன் நுகர்வோர் சிறப்பு முகாம் இன்று (ஜூலை 8, சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல், செல் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை இம்முகாமில் தெரிவிக்கலாம். இதில் குடும்ப அட்டை தாரர்கள் கலந்துகொண்டு ரேசன் விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை