சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மற்றும் வரும் 17ம் தேதி புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மற்றும் 17ம் தேதி புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே காலை 11, 11.30, 11.45, 12.20, 12.40, 1.40, 2.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே காலை 11.30, 12.10, 12.30, 1.50, 2.50, 3.30 இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் 17ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. * திருமால்பூர் – சென்னை கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று மற்றும் 17ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதில் திருமால்பூர் – சென்னை கடற்கரை இடையே 1.50 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படும். சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 11.15, 12, 1.20, 2, 3 ஆகிய மணிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் 17ம் தேதி பாதியாக ரத்து செய்யப்பட்டு சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படுகிறது. * சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே பிற்பகல் 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பாதியாக ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படுகிறது. * செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே காலை 10.15, 11, 12.25, 1.25, 2.15 ஆகிய மணிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் 17ம் தேதி பகுதியாக ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….
இன்று மற்றும் 17ம் தேதி மின்சார ரயில்கள் ரத்து
previous post