இன்று டாஸ்மாக் விடுமுறை

 

சிவகங்கை: இன்று காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும். மேலும் மதுக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள், லைசென்ஸ் பெற்ற மதுபானக்கூடங்கள், ஹோட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுபானக்கூடங்கள் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்டிருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை