இன்று அதிகாலை 5 மணிக்கு வீரராகவர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் 59வது திவ்யதேசமான திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைக்காண வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் குவிந்துவிடுவார்கள். இதனால் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இந்தாண்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பூஜைகள் முடிந்த பின்னர் காலை 6.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவர் என கோயில் கவுரவ ஏஜென்ட் சம்பத் தெரிவித்துள்ளார்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு