சென்னை: மந்தைவெளி திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுதா ஸ்ரீதரன் (67), கடந்த 2019ம் ஆண்டு சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், லைப் இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுவதாக செல்போனில் தொடர்புகொண்ட நபர், உங்களது பாலிசி முதிர்வு தொகையை பெற முன்தொகை செலுத்த வேண்டும் என்று கூறி நூதன முறையில் ரூ.2.13 கோடியை மோசடி செய்ததாக புகார் அளித்தார். விசாரணையில் டெல்லியை சேர்ந்த அமன்பிரசாத் (29), பிரதீப் குமார் (29), மனோஜ்குமார் (44), குபீர்சர்மா (எ) பிரின்ஸ் (27), ஹீமன்சு தாஹி (25), ராம்பால் (30) ஆகியோர், லைப் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்வதாக கூறி, சுதா ஸ்ரீதரனிடம் ரூ.2.13 கோடியை ஏமாற்றியது தெரியவந்தது. அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்….