இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

 

கோவை, ஜூன் 21: இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடந்தது. இன்றைய அவசர உலகத்தில் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா பயிற்சி என்பது அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பல யோகா நிகழ்வுகள், ஆசனங்களை இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்தினர். பிரதமரும், தமிழ்நாடு அரசும் அறிவுறுத்தியதின் பேரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ் பிரபு, முதல்வர் செண்பகவல்லி, யோகா ஆசிரியர் ராபர்ட் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை