இந்திய மருத்துவ துறையில் பார்மசிஸ்ட்பணிக்கு விண்ணப்பிக்க ஆக.25 கடைசி நாள்

சென்னை: இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையில் தினக்கூலி அடிப்படையில் மருந்து வழங்குநர், சிகிச்சை உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 25ம் தேதி கடைசி நாள் ஆகும். சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட அறிவிப்பு: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெற்றிடமாக உள்ள தினக்கூலி அடிப்படையில் மருந்து வழங்குநர்/ சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கான தகுதி விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை http://www.tnhealth.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற 25ம் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு