இந்திய தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து சோமாலியாவை போல் மும்பையை தாக்குவோம்; காவல்துறை ஹெல்ப்லைனுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: சோமாலியாவில் நடந்த தாக்குதலை போன்று இந்தியாவிலும் தாக்குதலை நடந்துவோம் என்று இந்திய தீவிரவாத அமைப்புகளுடன் ெதாடர்புடைய கும்பல் மும்பை போலீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போக்குவரத்து போலீஸ் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த 19ம் தேதி பாகிஸ்தான் போன் எண்ணிலிருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் செய்தி வந்தது. அமெரிக்காவின் இரட்டை கோபுர குண்டுவெடிப்பு போன்று மும்பையில் குண்டுவெடிப்பு நடக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் திட்டத்தைச்  செயல்படுத்தும் பணியில் ஆறு பேர் ஈடுபடுவார்கள் என்றும், அவர்களின் போன் எண்களும் குறிப்பிடப்பட்டன. உத்தர பிரதேசம், அரியானாவைச் சேர்ந்த 6 பேரின்  பெயர்களும் இருந்தன. போலீசுக்கு தகவல் அனுப்பியவன் தனது ஐபி முகவரியை மறைத்து வெளியிட்டுள்ளான். இவ்வழக்கு தொடர்பாக ஒருவனை ேபாலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்  மும்பை போக்குவரத்து காவல்துறை ஹெல்ப்லைனுக்கு நேற்று மற்றொரு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்தது. அதில், ‘இந்தியாவில் செயல்படும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப்  என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பானது, ‘சோமாலியா’ வகை தாக்குதலை நடத்தும். கடந்த வெள்ளிக்கிழமை சோமாலியா நாட்டில் நடந்தது போன்ற  பயங்கரவாதத் தாக்குதலை இந்தியாவிலும் நடத்த விரும்புகிறோம். தயவுசெய்து  எச்சரிக்கையாக இருங்கள். வாழ்க இந்திய மக்கள் – இந்தியா வாழ்க’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போன் எண்ணை போலீசார் சரிபார்த்ததில், குறிப்பிட்ட அந்த எண் சோமாலியா எண்ணிலிருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர்  கூறுகையில், ‘சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஓட்டல் மீது அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். அதேபோன்ற தாக்குதல் இந்தியாவிலும் நடத்தப்படும் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குற்ற நுண்ணறிவுப் பிரிவினர், கடந்த வாரம் பாகிஸ்தானில் இருந்து வந்த செய்தியையும், சோமாலியாவில் இருந்து வந்த செய்திக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். எப்படியாகிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்’ என்றார்….

Related posts

மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்!

5ஜி மொபைல் சந்தையில் முதல்முறையாக அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா!