தொண்டாமுத்தூர், ஜூலை 24: கோவை பேரூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொண்டாமுத்தூர் ஒன்றிய துணை செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் நரசிபுரம் பச்சாவயல் நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை சரி செய்ய வேண்டும். வினோபாஜி அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வீடு இல்லா ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சிவசாமி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் எப்படா பலர் கலந்து கொண்டனர்.