இந்தியா வென்றிருந்தால் மகிழ்ச்சி அளித்திருக்கும்: கோஹ்லியின் பாகிஸ்தான் ரசிகை நெகிழ்ச்சி

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிபோட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை வீழ்த்தியது. அப்போது மைதானத்தில் இருந்த இலங்கை அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். பாகிஸ்தான் அணி ரசிகர்கள் சோக வெள்ளத்தில் மூழ்கினர். குறிப்பாக, விராட் கோஹ்லியின் பாகிஸ்தான் ரசிகையான ‘லவ் கானி’ உடைந்து அழுதார். பின்னர் அங்கிருந்த இலங்கை ரசிகைகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களை ஆரத்தழுவினார்.இதைத்தொடர்ந்து அந்த காட்சிகளை ‘லவ் கானி’ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ‘லவ் கானி’ கூறுகையில், “ஆசிய கோப்பையை பாகிஸ்தான் வெல்ல முடியாவிட்டாலும், இந்தியா வென்றிருக்க வேண்டும். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்றார்….

Related posts

இன்றைய நாள் எனக்கானது: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி

விம்பிள்டன் டென்னிஸ் நவரோ கால்இறுதிக்கு தகுதி: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா பதிலடி; அடுத்த 3 போட்டியிலும் வெற்றியை தொடர போராடுவோம்: கேப்டன் சுப்மன் கில் பேட்டி