இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று தொடக்கம்!

ராஞ்சி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.   இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. லக்னோவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  ராஞ்சியில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் தோற்றால் இந்தியா தொடரை இழக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வியூகத்துடன் களம் இறங்க உள்ளது. தென்னாப்பிரிக்கா அணியும் தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குவதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது….

Related posts

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து: கால்இறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி; சொந்த மண்ணில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஜெர்மனி