இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்தவர்கள் நேரடியாக சவூதி அரேபியாவிற்கு வர தடை

ரியாத்: இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் நேரடியாக சவூதி அரேபியாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பட்டியலில் உள்ள இந்த 9 நாடுகள் அல்லாத ஒரு நாட்டில் 2 வாரங்கள் தங்கிய பின்னர் அந்த நாட்டின் வழியாக வர மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.அப்படி சவூதி அரேபியாவிற்கு வருபவர்களும் தடை விதிக்கப்பட்டுள்ள 9 நாடுகளில் 14 நாட்களுக்குள் பயணம் செய்திருக்க கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து நேரடியாக சவூதி அரேபியா வர தடை விதிக்கப்பட்டது.அதன்பின்னர் கடந்த மாதம் 6ஆம் தேதி அமெரிக்கா, யுஏஇ உள்ளிட்ட 11 நாடுகள் மீதான பயண தடை நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் தடுப்பூசி போடாதவர்களாக இருந்தால் சவூதி வந்தவுடன் 7 நாட்கள் ஹோட்டல்களில் குவாரன்டைனில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு