இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சியில் வெற்றிபெற்று வரும் மோடி..நவீன இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா : ஈபிஎஸ் புகழாரம்

சென்னை : பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு  தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் , ” இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்று உலகளவில் வல்லரசாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் , மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.  இதுகுறித்த அவரது ட்விட்டர் , “ நவீன இந்தியாவின் இரும்பு மனிதராய் திகழும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த ஆங்கில  புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் “ என்று  குறிப்பிட்டுள்ளார்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்