இந்தியாவில் 63 நாட்களுக்கு பிறகு 1 லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு; 24 மணி நேரத்தில் 86,498 பேர் பாதிப்பு; 2,123 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 2,123 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
* புதிதாக  86,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 2,89,96,473 ஆக உயர்ந்தது.
* புதிதாக  2,123 பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,51,309 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,82,282 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,73,41,462 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13,03,702 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நாட்டின் இதுவரை 23,61,98,726 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related posts

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பணிவு, அர்ப்பணிப்பை போற்றுகிறேன்: ராகுல்காந்தி அஞ்சலி

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!

அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம்