இந்தியாவில் ஜெட் வேகத்தில் கொரோனா பரவல்: ஒரே நாளில் 58,097 பேருக்கு பாதிப்பு..534 பேர் பலி…அதிர்ச்சியில் மக்கள்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.82 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.50 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 58,097 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,50,18,358 ஆக உயர்ந்தது.* புதிதாக 534 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,551ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,389 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,21,803 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  2,14,004பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 98.01% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.61% ஆக குறைந்துள்ளது.*இந்தியாவில் 1,47,72,08,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 96,43.238 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

Related posts

மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

ஆந்திராவில் இடிதாக்கி கணவன், மனைவி பலி