இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,529 பேருக்கு கொரோனா: 28,718 பேர் டிஸ்சார்ஜ்: 311 பேர் உயிரிழப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.48 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.37 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 23,529 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,39,980 ஆக உயர்ந்தது.* புதிதாக 311 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,48,062 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 28,718 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,30,14,898 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,77,020 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* இந்தியாவில் இதுவரை 88,34,70,578 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* நேற்று ஒரு நாள் மட்டும் 65,34,306 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.85% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக  உள்ளது* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.82% ஆக குறைந்துள்ளது….

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு