Saturday, July 6, 2024
Home » இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 1.14 லட்சம் பேர் பாதிப்பு; 2,677 பேர் உயிரிழப்பு, 1,89,232 பேர் டிஸ்சார்ஜ்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 1.14 லட்சம் பேர் பாதிப்பு; 2,677 பேர் உயிரிழப்பு, 1,89,232 பேர் டிஸ்சார்ஜ்

by kannappan

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,677 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,14,460 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,88,09,339 ஆக உயர்ந்தது.* புதிதாக 2,677 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,46,759 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,89,232 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  2,69,84,781ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,77,799 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இதன் மூலம், நாட்டின் இதுவரை  23,13,22,417 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

12 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi