இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 2,06,65,148 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,69,51,731 பேர் குணமடைந்துள்ளனர்.! உயிரிழப்பு 2,26,188 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 3,82,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயர்ந்தது.* புதிதாக 3,780 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,26,188 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,38,439 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,51,731 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 34,87,229 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.91% ஆக அதிகரித்துள்ளது.* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.10% ஆக அதிகரித்துள்ளது.* கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 17.00% ஆக அதிகரித்துள்ளது.* இதன் மூலம், நாட்டின் இதுவரை 16,04,94,188 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

Related posts

கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!