மும்பையில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி தொலைதூரம் பயணிக்க கடல் வழி டாக்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை – நவிமும்பை ஆகிய இரட்டை நகரங்களை இந்த கடல் வழி டாக்சி இணைகிறது. இத்திட்டம் மூலம் கேட்வே ஆப் இந்தியாவில் நவி மும்பைக்கு விரைவாக கடல்வழியில் பயணிக்க முடியும். நெருல் – பேலாபுர் – எலிபண்டா குகைகள் என அக்கம் பக்கம் உள்ள பகுதிகளையும் இந்த கடல் வழித்தடம் இணைகிறது. இத்திட்டத்தை ஒன்றிய கடல் போக்குவரத்துறை அமைச்சர் சார்பானந்தா சோனோவால் காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.