இணையத்தில் புகாரளிக்கும் வசதி: மயிலை த.வேலு வாக்குறுதி

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று காலை ஆர்.கே.மடம் சாலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பொதுமக்கள், கடை வைத்திருப்பவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் தொடர்ந்து, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று அங்கிருந்த இளைஞர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் இளைஞர்களுக்கு என்ன மாதிரியான திட்டங்கள் உள்ளது என்பதை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘இந்த தொகுதிக்கும், மக்களுக்கும் என்ன தேவை என்பதை அறிந்தவன் நான். எனவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மேலும் சிறந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இளைஞர்களுக்கு நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். மக்களின் கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படும், மக்கள் இணையத்தில் குறைகளை தெரிவிக்க வழிமுறை செய்யப்படும். எந்நேரமும் எம்எல்ஏ அலுவலகம் உங்களுக்காக செயல்படும்,’ என்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் திமுகவிற்கு தான் எங்கள் வாக்கு நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று உறுதியளித்தனர்….

Related posts

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து

துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து!

புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு!