காரைக்குடி, செப்.18: காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் மரியப்பனுக்கு சொந்தமாக பழமையான வீடு இருந்தது. வீட்டின் முன்புற பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் மகன், மகள் வெளியே தப்பி ஓடி வந்துள்ளனர். சம்பவ இடத்தை வட்டாசியர் ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.