இடப்பிரச்சனையில் 4 பேர் மீது வழக்கு

 

தொண்டி, செப்.20: தொண்டி அருகே முள்ளிமுனையில் இடப்பிரச்சனை தகராறு தொடர்பாக நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையை சேர்ந்தவர்கள் காமாட்சி(60), பஞ்சகல்யாணி(49). இருவருக்கும் பாதை விடுவதில் பிரச்சனை இருந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இது குறித்த தகவலின் அடிப்படையில் பஞ்சகல்யாணி, விக்னேஷ்வரன், இளஞ்சியம், விஜயகுமார் ஆகியோர் மீது தொண்டி போலீசார் வழக்குபதிவு விசரித்து வருகின்றனர்.

இதே போல் எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள மண்டலகோட்டையை சேர்ந்தவர் சவரியம்மாள்(55). இவருக்கு சொந்தமான இடத்தில் போட்டிருந்த தகர செட் மற்றும் கல்லுகாலை சேதப்படுத்தியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இதே ஊரை சேர்ந்த ஜெயராஜ்(55), பாத்திமா(51) மற்றும் மனோ ஆகியோர் மீது எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ. சுல்தான் இபுராகிம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி