ஆவடி: ஆஸ்பத்திரியில் ஆட்டோ திருடி நண்பர் வீட்டில் பதுக்கிவைத்திருந்த தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த திருநின்றவூர், நாச்சியார்சத்திரம், பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (45). ஆட்டோ டிரைவர். கடந்த 31ம் தேதி இரவு ரமேஷ்குமாரின் மகள் உடல்நலக்குறைவு காரணமாக திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மகளை பார்க்க ஆட்டோவுடன் மருத்துவமனைக்கு வந்தார். ஆட்டோவை மருத்துவமனையில் உள்ள ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு நள்ளிரவு மகளுடன் தங்கியுள்ளார். மறுநாள் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மாயமானதால் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எஸ்.ஐ விஜயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஆட்டோவை நள்ளிரவு இருவர் திருடிச்செல்வது பதிவாகியிருந்தது. கேமராவில் பதிவான உருவத்தை வைத்து இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர்.இந்த நிலையில், நடுகுத்தகை, கணபதி தெருவை சேர்ந்த பழனிச்சாமி (46), அவரது மகன் அபினேஷ் (21) ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர். விசாரணையில், இருவரும் ஆட்டோவை திருடி திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே வாழியூர் கிராமத்தில் உள்ள நண்பர் வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் அழைத்துக்கொண்டு சென்று ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதன்பிறகு தந்தை, மகன் ஆகியோரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி, பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்….
ஆஸ்பத்திரியில் ஆட்டோ திருட்டு: தந்தை, மகன் கைது
previous post