பெரம்பூர்: பெரம்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே பறக்கும் படை அதிகாரி நந்தகோபால் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, அதில் அரிசி மூட்டைகள் இருந்தன. அதை ஏற்றி வந்த ராணிப்பேட்டை மாவட்டம் கழனி கிராமத்தை சேர்ந்த முத்து (46) என்பவரிடம் விசாரித்தபோது, திருமழிசையில் உள்ள செந்தில்நாதன் என்பவர் ஆரணியில் உள்ள எஸ்.எஸ்.பாலமுருகன் ரைஸ் மில்லில் மொத்தமாக அரிசி மூட்டைகளை ஆர்டர் செய்து அதனை சென்னையில் பல இடங்களில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால், மினி வேனில் இருந்த 2,000 கிலோ அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்….