ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.48 லட்சம் அதிரடி பறிமுதல்

அம்பத்தூர்: அம்பத்தூர் தேர்தல் பறக்கும்படை அதிகாரி கேசவன் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவின் பால் பண்ணை சாலையில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதிலிருந்த பொன்னேரி செல்லப்ப நாடார் ரைஸ்மில் தெருவை சார்ந்த பாதிரியார் பிரகாஷிடம் (37), ரூ.87,500 இருந்தது தெரியவந்தது. அவரிடம் அந்த பணத்திற்கான ஆவணங்களும் இல்லை. இதனையடுத்து, பறக்கும்படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல, நேற்று முன்தினம் மதியம் அம்பத்தூர் தொழிற்பேட்டை 3வது பிரதான சாலை தொலைபேசி இணைப்பகம் அருகில் நிலையான கண்காணிப்புப்படை அதிகாரி அமலோபர்பவர் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் கம்பெனி நடத்தி வரும் சதீஷ் (40) என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ரூ.60,500 இருந்தது. அந்த பணத்திற்கு அவரிடம் எந்த ஆவணமும் இல்லாததால் பறிமுதல் செய்தனர். …

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது