Sunday, June 30, 2024
Home » ஆவடி மாநகர செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா: பால் வளத்துறை அமைச்சர் நாசர் வாழ்த்தினார்

ஆவடி மாநகர செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா: பால் வளத்துறை அமைச்சர் நாசர் வாழ்த்தினார்

by kannappan

ஆவடி: ஆவடி மாநகர திமுக செயலாளர் பேபிவி.சேகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில், மணமக்களை பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஆவடி மாநகர கிழக்கு பகுதி திமுக செயலாளர் பேபி வி.சேகர்-அமுதா சேகர் ஆகியோரது மகள் எஸ்.மதி- எஸ்.சாய்பாஸ்கர் ஆகியோரது திருமண வரவேற்பு விழா சென்னை அடுத்த திருவேற்காடு, ஜி.பி.என் திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக பால் வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், அவரது மனைவி பாத்திமா கனி ஆகியோர் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக மாநகர செயலாளர் பேபி சேகர், ஏ.எஸ்.பரத் விக்ரமன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.  விழாவில், எம்எல்ஏக்கள் பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், எழும்பூர் ஐ.பரந்தாமன், கும்மிடிப்பூண்டி டி.ஜே.கோவிந்தராஜன் திருத்தணி எஸ்.சந்திரன், அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், மாநில மாணவரணி இணை அமைப்பாளர் பூவை.ஜெரால்டு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், சா.மு.நா.ஆசிம்ராஜா, மாவட்ட நிர்வாகிகள் நடுக்குத்தகை ஜெ.ரமேஷ், காயத்ரி தரன், ம.ராஜி, ஜி.ஆர்.திருமலை, இரா.ருக்கு, ஆவடி மாநகரச்செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், திருவேற்காடு நகர செயலாளர் என்.இ.கே மூர்த்தி, மதிமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், ஆவடி மாநகர காங்கிரஸ் தலைவர் இ.யுவராஜ், திமுக மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஏ.ஜெ.பவுல், பிரபுகஜேந்திரன், வக்கீல் எஸ்.மூர்த்தி, ஓ.ஆர்.நாகூர்கனி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் புஜ்ஜி. ராமகிருஷ்ணன் பூவை ஜெயக்குமார், டி.தேசிங்கு, டி.கிறிஸ்டி எஸ்.மகாலிங்கம், எம்.ரமேஷ், ஆர்.ஜெயசீலன் கே.அரிகிருஷ்ணன், கூளூர் ராஜேந்திரன், துரை.வீரமணி, பூவை ரவிக்குமார், தி.சு.ரவிச்சந்திரன், தி.வை.ரவி, தி.வே.முனுசாமி மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆவடி மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், வட்டச்செயலாளர்கள், நகர பிரதிநிதிகள், தொண்டர்கள், உற்றார், உறவினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், காஞ்சி மாவட்ட துணைச்செயலாளர் வெ.விசுவநாதன் நன்றியுரை ஆற்றினார்….

You may also like

Leave a Comment

7 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi